Monday, August 06, 2007

வைகறையில் வைகைக்கரையில்

பயணங்கள் முடிவதில்லை
பாடல்: வைகறையில் வைகைக்கரையில்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

வைகறையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன் உன் அருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில் நாளும் நடத்தும் ஊர்வலங்கள்

(வைகறையில்)

உன் நினைவே எனக்கோர் சுருதி உன் கனவே எனக்கோர் கிருதி
உன் நினைவில் மனமே உருகி வாடுதம்மா மலர் போல் கருகி
பலப் பல ஜென்மம் நான் எடுப்பேன் பாடல்கள் கோடி நான் படிப்பேன்
அன்பே உனக்கே காத்திருப்பேன்...ஆஅ...

(வைகறையில்)

ஆயிரம் ஆயிரம் ஆசைகலை ஆசையில் உன்னிடம் பேச வந்தேன்
ஆவியில் மேவிய கேள்விகளை கேளென உன்னிடம் கூற வந்தேன்
நினைவுகள் ஏனோ மறைகிறதே கனவுகள் ஏனோ கலைகிறதே
நிழல் போல் உன்னைத் தொடர்கிறதே...ஆஅ...

(வைகறையில்)