தேனிலவு
பாடல்: பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
குரல்: ராஜா
வரிகள்:
பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால்னிலாவைப் போலவந்த பாவையல்லவா - நானும்
பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா
மேகவண்ணம் போலமின்னும் ஆடையினாலே
மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே
பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா - இங்கு
பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா
மாலையல்லவா நல்ல நேரமல்லவா - இன்னும்
வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா
(பாட்டுப்)
அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே - நதி
அன்ன நடை போடுதம்மா பூமியின் மேலே
கன்னி உந்தன் காதலனைக் காணவில்லயா
இந்தக் காதலிக்குத் தேன் நிலவில் ஆசையில்லயா
காதல் தோன்றுமா இன்னும் காலம் ஆகுமா - இல்லை
காத்துக் காத்து நின்றதுதான் மீதமாகுமா
(பாட்டுப்)