Monday, August 06, 2007
பாடும்போது நான் தென்றல்
நேற்று இன்று நாளை
பாடல்: பாடும்போது நான் தென்றல் காற்று
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்:
பாடும்போது நான் தென்றல் காற்று பருவமங்கையோ தென்னங்கீற்று
நான் வரும்போது ஆயிரம் பாடல் பாட வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
(பாடும்போது)
மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து (2)
இதழில் தேனைக் குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து (2)
எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே
(பாடும்போது)
எல்லைகளில்லா உலகம் என் இதயமும் அதுபோல் உலவும் (2)
புதுமை உலகம் மலரும் நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும் (2)
யாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே
(பாடும்போது)