பாடல்: கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: வாலி
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான் (2)
(கொடுத்ததெல்லாம்)
மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலைனிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை
(கொடுத்ததெல்லாம்)
இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார்
கிடைத்தவர்கள் பிழைத்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ வைப்போம்
(கொடுத்ததெல்லாம்)