Sunday, August 05, 2007

மௌளனமே பார்வையாய்

கொடி மலர்


மௌளனமே பார்வையாய் ஒரு பாட்டுப் பாடவேண்டும்
நாணமே ஜாடையாய் ஒரு வார்த்தை பேசவேண்டும்

(மௌளனமே)

அல்லிக்கொடியே உன் முல்லை இதழும்
தேனாறு போலப் பொங்கி வர வேண்டும்
அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல் - என்னை
அள்ளிச் சூடிக்கொண்டு விடவேண்டும்

(மௌளனமே)

முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னமிருக்கும் இந்தச் சின்ன முகத்தில் - பல
மொழிகள் பாடம் பெற வரவேண்டும்

(மௌளனமே)