Wednesday, October 22, 2008

kuRai onRum illai



குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றும் இல்லை கண்ணா
குறையொன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா! மலையப்பா! கோவிந்தா! கோவிந்தா!

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும்
குறையொன்றும் எனக்கில்லை கண்ணா!

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா! மலையப்பா! கோவிந்தா! கோவிந்தா!

கலிநாளுக்கு இரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

யாரும் மறுக்காத மலையப்பா உன்வாழ்வில்
ஏதும் தரநிற்கும் கருணைக்கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கே

ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா! மலையப்பா! கோவிந்தா! கோவிந்தா