Sunday, June 05, 2005

பாடிப் பறந்த கிளி

கிழக்கு வாசல்


பாடிப் பறந்த கிளி
பாத மரந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்றேனே
கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே

(பாடிப் பறந்த)

சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சிப் போனதடி
கணட கனவு அது காணாதாச்சு
கண்ணுமுழிச்சா அது வாராது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டியிழுத்தா அது வாராது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு

(பாடிப் பறந்த)

ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
கல்லிலடிச்சா அது காயம் ஆறும்
சொல்லிலடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
வீணாச தந்தவரு யாரு யாரு

(பாடிப் பறந்த)

பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு

கிழக்கு வாசல்

பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்

(பச்ச மல)

காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
மஞ்சளோ தேகம் கொஞ்சவரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டுவரும் ராகம்
நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய்

(பச்ச மல)

மூனாக்கு மொகம் பார்த்து வெண்ணிலா நாண
தாளாம தடம்பார்த்து வந்தவழி போக
சித்திரத்துச் சோல முத்துமணி மால
மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணில மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன் ஹோய்

(பச்ச மல)

ஒரு மணி அடித்தால் கண்ணே


காலமெல்லாம் காதல் வாழ்க


ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
telephon ண் குயிலே வேண்டும் உன் தரிசனம்
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்தப் பாடலின் சுவரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவதும் ஏனடியோ

(ஒரு மணி)

வாசம் மட்டும் வீசும் பூவே வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா
தென்றல் போல எங்கும் உன்னைத் தேடுகிறேன் நான் தேடுகிறேன்
தேடி உன்னைப் பார்த்துப் பார்த்து கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து
சிந்தும் விழி நீரில் நானே மூழ்குகிறேன் நான் மூழ்குகிறேன்
வீசிடும் புயல் காற்றிலே நான் ஒற்றைச் சிறகானேன்
காதலின் சுடும் தீயிலே நான் எரியும் விறகானேன்
மேடைதோரும் பாடல் தந்த வான்மதியே
ஜீவன் போகும் இங்கு வந்தால் நிம்மதியே
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

(ஒரு மணி)

உந்தன் முகம் பார்த்த பின்னே கண்ணிழந்து போவதென்றால்
கண்கள் ரெண்டும் நானிழப்பேன் இப்போதே நான் இப்போதே
உந்தன் முகம் பார்க்கும் முன்னே நான் மறைந்து போவதென்றால்
கண்கள் மட்டும் அப்பொழுதே மூடாதே இமை மூடாதே
காதலே என் காதலே எனைக் காணிக்கை தந்துவிட்டேன்
சோதனை இனித் தேவையா சுடும் மூச்சினில் வெந்து விட்டேன்
காதல் என்னும் சாபம் தந்த தேவதையே
காணலாமோ ராகம் நின்று போவதையே
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

(ஒரு மணி)

என்னவளே அடி என்னவளே


காதலன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் - இன்று
கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்

(என்னவளே)

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டயும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி - இது
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி

(என்னவளே)

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உனைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன் - என்
காதலின் தேவயை காதுக்குள் ஓதிவைப்பேன் - உன்
காலடி எழுதிய கோலங்கள் புதுக்
கவிதைகள் என்றுரைப்பேன்

(என்னவளே)

நான் காற்று வாங்கப் போனேன்

கலங்கரை விளக்கம்

நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்

(நான் காற்று)

நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும் (2)
அந்த அழகு ஒன்று போழும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்

(நான் காற்று)

நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை (2)
கொஞ்சம் விலகி நின்ற போதும் என் இதயம் தாங்கவில்லை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்

(நான் காற்று)

என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை (2)
என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்

(நான் காற்று)

பொன்னை விரும்பும் பூமியிலே

ஆலயமணி

பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலயும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே

(பொன்னை)

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே ஆலயமணியின் இன்னிசை நீயே (2)
தாய்மை எனக்கே தந்தவர் நீயே தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம் புதிய தீபம் கொண்டு வந்தாயே

(பொன்னை)

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன் பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன் (2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன் அழைத்து வந்தார் உன்னிடம் என்னை
இந்த மனமும் இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே

(பொன்னை)

ஆல மரத்தின் விழுதினைப் போலே அனைத்து நீயும் உறவு தந்தாயே (2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில் வாழ்வது போலே வாழ வைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு உள்ளம் ஒன்றே என்னுயிரே

(பொன்னை)

சின்ன மனிக் குயிலே மெல்ல வரும்

அம்மன் கோயில் கிழக்காலே

சின்ன மனிக் குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாத்தான் பதிலும் சொல்லாம
குக்கூவெனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

(சின்ன)

நில்லாத வைகையிலே நீராடப் போகயிலே
சொல்லாத சைகையிலே கண்ஜாட செய்கயிலே
கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உளள கனக்குதடி ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கணும் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

(சின்ன)

பட்டுத் துணியுடுத்தி உச்சி முடி திருத்தி
எட்டு அடியெடுத்து எட்டி நடந்துல
உன் சேல காற்றில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பார்த்து
என் எண்ணம் கூத்தாட
மாறாப்பு சேலையில நூலப்போல நானிருக்க
நான் சாமிய வேண்டுறேன் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

(சின்ன)

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து

அம்மன் கோயில் கிழக்காலே

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே என் சின்னா ராச (2)
உன் தோளுக்காகத்தான் இந்த மால ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசுப்

(பூவ)

காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால (2)
குத்தால மழ என் மேல விழ அப்போதும் சூடாச்சு
எப்போதும் என தப்பாம அண என் தேகம் ஏடாச்சு
சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன் (2)
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசுப்

(பூவ)

வாடையா வீசும் காத்து வலைக்குதே எனப்பாத்து
வாங்கலேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து
கண்ணாடி வள முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னாள நெனச்சாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா (2)
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசுப்

(பூவ)

சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி கண்ணம்மா வானக் கருமை கொல்லோ
பட்டுக் கருனீலப் புடவை பதித்த நல் வயிரம்
நட்டனடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி

சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான்
நீலக் கடலலையே உனது நெஞ்சின் அலைகளடி
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடி
வாலைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் சாத்திரம் ஏதுக்கடி
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணமா சாத்திரம் உண்டோடி
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடி இது பார் கன்னத்து முத்தம் ஒன்று