Friday, February 04, 2005

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம்

பாடல்: அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம்
குரல்: மனோ
வரிகள்:

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் பூவனம் இதோ காமன் உற்சவம் இங்கே
ஒரே நாள் நிலவினில் முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா

(அதோ)

உனது பாதம் அடடட இலவம் பஞ்சு
உதட்டைப் பார்த்து துடித்தது எனது நெஞ்சு
இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம்
நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்
தேகம் கொஞ்சம் மூடவே கூந்தல் போதும் போதுமே
ஆடை இங்கு வேண்டுமா நாணம் என்ன வா வா

(அதோ)

குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்
தென்னம்பாண்டி முத்தைப் போல் தேவி புன்னகை
வண்டு ஆடச் சொல்லுமே செண்டு மல்லிகை
உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான்
காதல் பிச்சை வாங்குவான் இன்னும் என்ன சொல்ல

(அதோ)

வச்ச பார்வை தீராதடி மச்சான்

இளமைக் கோலம்

பாடல்: வச்ச பார்வை தீராதடி
குரல்: ஜேசுதாஸ்
வரிகள்:

வச்ச பார்வை தீராதடி மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்

(வச்ச)

எங்கு போனாலும் உன்னைத்தேடி ஆசை பின்னால போகும்
எங்கு பார்த்தாலும் உன்னைப் போல தோற்றம் முன்னால தோணும்
என் கையோரம் நீ வந்தாலே என் சந்தோஷம் மேலே போகும்
காணாததைக் கண் தேடுது கன்னி நீ என்னோடு வாம்மா

(வச்ச)

கன்னிப் பூவோட நல்ல வாசம் காளை நெஞ்சத்தை மாத்தும்
சின்னக் காலோட வந்த தாளம் தேக சொர்க்கத்தில் ஏறும்
உன் கண்ணாலே நீ பார்த்தாலே நான் ஏதேதோ மாறிப் போவேன்
ஆறாதது மாறாதது ஆஹாஹா பெண்ணோட மோகம்

(வச்ச)

ஈரமான ரோஜாவே என்னைக்கண்டு

இளமைக் காலங்கள்

பாடல்: ஈரமான ரோஜாவே என்னைக்கண்டு மூடாதே
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: வைரமுத்து

ஈரமான ரோஜாவே என்னைக்கண்டு மூடாதே
கண்ணீல் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

(ஈரமான)

என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகம் (2)
உன் வாசலில் எனைக் கோலம் இடு இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே...
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து

(ஈரமான)

நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை (2)
என் நெஞ்சிலே ஒரு துக்கம் இல்லை கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி...
உன் போல என்னாசை தாங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

(ஈரமான)

பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக்

இந்தியன்

பாடல்: பச்சைக் கிளிகள் தோளோடு
குரல்: ஜேசுதாஸ்
வரிகள்: வைரமுத்து

பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம் பூச்சி கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு

(பச்சைக் கிளிகள்)

அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம்
அடி பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் - அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம்
பெண்ணே நரை எழுதும் சுயசரிதம்
அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்

(பச்சைக் கிளிகள்)

உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓரானந்தம் பந்தம் பேரானந்தம்
கண்ணே உன் விழியில் பிறர்க்கழுதால்
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்

(பச்சைக் கிளிகள்)

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா கலையெல்லாம்

ஆலயமணி

பாடல்: கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
குரல்: டி எம் சௌந்தரராஜன், பி சுஷீலா
வரிகள்: கண்ணதாசன்

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா (2)
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா (2)

(கல்லெல்லாம்)

கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம் காலைக்கனியாக்குமுந்தன் ஒரு வாசகம் (2)
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக் கண்ணல்லவா (2)
இல்லயென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா

(கல்லெல்லாம்)

கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா (2)
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி (2)
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி

(கல்லெல்லாம்)

சட்டி சுட்டதடா கை

ஆலயமணி

பாடல்: சட்டி சுட்டதடா கை விட்டதடா
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

சட்டி சுட்டதடா கை விட்டதடா (2)
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா (2)
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா

(சட்டி)

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா (2)
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா

(சட்டி)

ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா (2) - மனம்
சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா

(சட்டி)

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா - நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா (2)
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா

(சட்டி)

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா கலையெல்லாம்

ஆலயமணி

பாடல்: கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
குரல்: டி எம் சௌந்தரராஜன், பி சுஷீலா
வரிகள்: கண்ணதாசன்

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா (2)
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா (2)

(கல்லெல்லாம்)

கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம் காலைக்கனியாக்குமுந்தன் ஒரு வாசகம் (2)
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக் கண்ணல்லவா (2)
இல்லயென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா

(கல்லெல்லாம்)

கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா (2)
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி (2)
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி

(கல்லெல்லாம்)

அதோ அந்த பறவை போல

ஆயிரத்தில் ஒருவன்

விஸ்வனாதன்-ராமமூர்த்தி
பாடல்: அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
குரல்: டி எம் சௌந்தரராஜன் குழுவினர்
வரிகள்: கண்ணதாசன்

அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(லலாலா லா...)

(அதோ அந்த)

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல்னீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ அந்த)

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ அந்த)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ அந்த)

ஓடும் மேகங்களே ஒருசொல்

ஆயிரத்தில் ஒருவன்

பாடல்: ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

(ஓடும்)

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

(ஓடும்)

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

(ஓடும்)

சாதி மல்லிப் பூச்சரமே

அழகன்

பாடல்: சாதி மல்லிப் பூச்சரமே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்:

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையுள்ள ஆசையடி அவ்வளவு ஆசையடி
எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

(சாதி மல்லிப்)

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்லா ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

(சாதி மல்லிப்)

உலகமெல்லாம் உண்ணுப்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பார்த்தோமா
படிச்சத புரிஞ்சு நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு

(சாதி மல்லிப்)

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

அவள் ஒரு தொடர்கதை


எம் எஸ் விஸ்வனாதன்
பாடல்: தெய்வம் தந்த வீடு
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: கண்ணதாசன்

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தானா? இல்லை
என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

(தெய்வம்)

வெறும் கோவில் இதிலென்ன அபிஷேகம்?
உன் மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன?
இதில் தாய் என்ன? மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

(தெய்வம்)

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன?
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

(தெய்வம்)

நான் பார்த்ததிலே அவள்

அன்பே வா

பாடல்: நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்
குரல்: டி எம் சௌந்தரராஜன், சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்
நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன்
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்

எந்தக் கலைஞனும் அவளைச் சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்

(நான் பார்த்ததிலே)

இடையோ இல்லை இருந்தால் - முல்லைக்
கொடிபோல் மெல்ல வளையும்
சின்னக் குடைபோல் விரியும் இமையும்
விழியும் பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே
குளிர் புன்னகை புரிவதனாலே
கனவோ நினைவோ எதுவோ

நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான்
நல்ல அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்

ஒரு நாள் இல்லை ஒரு நாள்
வந்து அவந்தான் சொல்லத்துடித்தான்
உயிர் நீயே என்று நினைத்தான்
இன்று கண்ணால் சொல்லி முடித்தான்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ
இந்தக் காதலி சுகம் பெறுவாலோ
கனவோ நினைவோ எதுவோ

(நான் பார்த்ததிலே)

புதிய வானம் புதிய பூமி

அன்பே வா

பாடல்: புதிய வானம் புதிய பூமி
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

புதிய வானம் புதிய பூமி - எங்கும்
பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூமழை பொழிகிறது ஒ ஒ ஓஹோ

லால்ல லாலால்லா ஓஓஓ லால்ல லாலால்லா

(புதிய வானம்)

புதிய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக்கொள்ளும் வேளையிலே
இமயத்தில் எழுகின்ற குளிர்காற்று - என்
இதயத்தைத் தொடுகிறது
அன்று இமயத்திலே சேரன் கொடி பறந்த
அந்தக் காலம் தெரிகிறது
அந்தக் காலம் தெரிகிறது

(புதிய வானம்)

சின்னக் குழந்தைகளைப் பார்க்கையிலே
பிஞ்சு மழலை மொழி கேட்கையிலே
நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் - என்ற
நம்பிக்கை தெரிகிறது
அவர் வரவேண்டும் நலம் பெறவேண்டும்
என்று ஆசை துடிக்கிறது
என்று ஆசை துடிக்கிறது

(புதிய வானம்)

எந்த நாடு என்ற கேள்வியில்லை
எந்த ஜாதி என்ற பேதமில்லை
மனிதர்கள் அன்பின் வழிதேடி - இங்கு
இயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்ததுபோல் மனம் உயர்ந்ததென்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்
இவர் வாழ்வில் விளக்குகிறார்

(புதிய வானம்)

உள்ளம் என்றொரு கோவிலிலே

அன்பே வா

பாடல்: உள்ளம் என்றொரு கோவிலிலே
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

அன்பே வா அன்பே வா வா வா வா

உள்ளம் என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா

அன்பே வா அன்பே வா வா வா வா

நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும்
நிழல்கொடுத்தால் என் நினைவுகள் விழித்துக்கொள்ளும்
பாதையிலே வெளிச்சமில்லை பகல் இரவு புரியவில்லை
பார்வையும் தெரியவில்லை
ஆயிரம்தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை

(உள்ளம் என்றொரு)

வான்பறவை தன் சிறகினை எனக்குத்தந்தால்
பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்
வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்துவந்தே
காதலை வாழவைப்பேன்
அழுதமுகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன்

(உள்ளம் என்றொரு)

ஆயிரம் நிலவே வா ஓராயிரம்

அடிமைப் பெண்

பாடல்: ஆயிரம் நிலவே வா
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சுசீலா

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோடு சுவை சேர புதுப் பாடல் ஒன்று பாடப் பாட

(ஆயிரம்)

நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ (2)
உன் உயிரிலே என்னை எழுத பொன்மேனி தாராயோ

(ஆயிரம்)

மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ (2)
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக

(ஆயிரம்)

அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெற
அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெற
சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ (2)
இன்பம் இதுவோ இன்னும் எதுவோ தந்தாலும் ஆகாதோ

(ஆயிரம்)

பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
அந்த நிலையில் அந்த சுகத்தை நான் உணரக் காட்டாயோ

(ஆயிரம்)

ஆசை நூறு வகை வாழ்வில்

அடுத்த வாரிசு

பாடல்: ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
குரல்: மலேஷியா வாசுதேவன்
வரிகள்: கங்கை அமரன்

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை தீரும் வரை வா
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம் (2)

(ஆசை)

என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு
பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
இங்கு சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா (2)
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

(ஆசை)

முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு
இங்கு பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா (2)
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

(ஆசை)